ஹான்ஸ் கூலிப் புகையிலை கடத்தி சென்ற இருவர் கைது..!

- Advertisement -

0

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 அடி சாலை பகுதியில் துவாக்குடி பேரூராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மகாதேவன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த மாருதி எக்கோ கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அப்பொருட்களை காரில் கடத்தி வந்த மாத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்தர் மாணிக்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ் கூலிப் உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.