திருச்சி ரோட்டரி கிளப் ஆப் மிட் டவுன் மற்றும் சரஸ்வதி கஃபே இணைந்து விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி!
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன், உயர்தர சைவ உணவகமான சரஸ்வதி கஃபே மற்றும் ஈஷா அறக்கட்டளையின் மண் வளம் பாதுகாப்போம் இயக்கம் இணைந்து தமிழகத்தை பசுமை பரப்பை பரப்புவதற்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி உள்ள மோரணி மலை எதிரில் உள்ள ஈசா நர்சரி பள்ளியில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மருங்காபுரி ஜமீன்தார் கிருஷ்ண விஜயன், பாரதிய ஜனதா கட்சி மாநில பொறுப்பாளா எச். ராஜா ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.துவரங்குறிச்சி சபரி நர்சரி குமார் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், தன்னார்வ தொண்டர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ஸ்ரீ சரஸ்வதி கஃபே நிர்வாக பங்குதாரர் கௌரி சங்கர் செய்திருந்தார்.