திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நாளை அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

- Advertisement -

0

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:திமுக கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை  முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (செப்15) காலை 8 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையிலும் மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட,மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய பகுதி, நகர பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன் என்று அறிக்கையில் மாவட்ட செயலாளர் வைரமணி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.