திருச்சியில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்க செயலாளர் வெங்கட் அழைப்பு!
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் நீதிபதிகள் வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி நாளை( 25/11/2024 -திங்கட்கிழமை ) மதியம் 1 மணி அளவில் புதிய கட்டிடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம் அல்லது தலைவர் முல்லை சுரேஷ் இடம் கூறினால் அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார்.கட்டாயம் வழக்கறிஞர்கள் தாங்கள் சீருடையில் மற்றும் பார் கவுன்சில் அடையாள அட்டை (ID card) கையில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .