மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட சமது மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு!
திருச்சி காஜா நகரில் அமைந்துள்ள சமது மேல்நிலைப்பள்ளி(CBSE) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது அஷ்ரப், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி சிறப்பித்த மாணவனை பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் V.S.A. முகமது சுஹைல், பள்ளி முதல்வர் மும்தாஜ் பேகம், உடற்கல்வி ஆசிரியர் உமா மகேஸ்வரன் பயிற்சியாளர்களும், ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தனர்.