திருச்சி மாவட்டத்தில் 12 புதிய மருத்துவ கட்டிடங்கள் அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார்….!

- Advertisement -

0

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.பின்னர்அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு இணைந்து  பல்வேறு துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சார்பாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை தேர்ந்தெடுத்து ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார். மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன்,செ.ஸ்டாலின்குமார்,ந.தியாகராஜன்,எம்.பழனியாண்டி மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.