திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நகரட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.193.38 இலட்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி க்கு ரூ.235.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் ” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் ஆன்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது.
வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி, நாகராஜ்,ஜோசப் ஜெரால்டு காஜாமலை பகுதி திமுக செயலாளர் காஜாமலை விஜய், தில்லைநகர் கண்ணன், அந்த நல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ்,அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.