மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் கே.என். நேரு..!

- Advertisement -

0

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழாவை மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருச்சி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 1189 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100.54 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி அங்கு அமைக்கப்பட்டியிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

- Advertisement -

விழாவில்  மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார்,மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், மு.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையாளர் சரவணன் , மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.