திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரேசன் கடை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு..!

- Advertisement -

0

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்-24, தெற்கு முத்துராஜா தெரு பகுதியில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்-08, லிங்கம் நகர் பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும்,வார்டு எண்-09, தெற்கு வெள்ளாள தெரு பகுதியில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையினை குடிநீர் வழங்கல் மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத்தார். மேலும் வார்டு எண் 24 தெற்கு தெரு பகுதியில் ரூ 49.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை திறந்து வைத்தார்.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வே.சரவணன் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.