தீபாவளிக்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும் என அமைச்சர் தகவல்!

- Advertisement -

0

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தீபாவளிக்குத் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14/10/24 அன்று துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்று கூறியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், அறிக்கையை நன்கு படிக்காமல், துவரம் பருப்பு விநியோக குறைபாடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வானதி சீனிவாசனுக்கு தனது அறிக்கையை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அக்டோபர் மாதம் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில், 15.10.2024-ஆம் தேதிவரை 9461 மெட்ரிக் டன் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், பாமாயில் ஒதுக்கீட்டில் இருந்து 9783000 பாக்கெட்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தீபாவளி பண்டிகையின்போது தட்டுப்பாடின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படும் என்று அமைச்சர் மீண்டும் உறுதியளித்துள்ளார். அவர் வழங்கிய தகவலின்படி, மீதமுள்ள பருப்பும், பாமாயிலும் விரைவாகத் தங்குதடையின்றி வழங்கப்படும் என்பதையும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.