லாட்டரி அதிபர் மார்ட்டின் & வி.சி.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
கோவை துடியலூரில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை நடந்தது.சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.சமீபத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோ ருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது. வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழலில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.