தமிழக அரசை கண்டித்து மாநகர்& புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி தெப்பக்குளம் அருகே அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கோகில இந்திராணி கலந்து கொண்டார்.இதில் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர் நஷீமா, 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், மலைக்கோட்டை ஐயப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை ஆறு சதவீதம் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், கழக அமைப்பு செயலாளர் மனோகரன், பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்