வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை கண்டித்து காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள பழைய பேப்பர்கள், இரும்பு பொருட்களை ஏற்றும் இறக்கும் பணியில் கடந்த 25 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சுமை தூக்கும் தொழிலாளர்கள் 45 பேர் தனித்தனி முதலாளிகளிடம் 8 க்கும் மேற்பட்ட கடைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும், ஆண்டுக்கு ஆண்டு போனஸ் தொகையும் மேற்படி அந்தந்த முதலாளி களிடம் பேசி கடந்த 25 ஆண்டுகளாக பெற்று வருகிறார்கள்இந்நிலையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த 10 தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்காமல்கடந்த 17-ந்தேதி மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு எனக்கூறி வேலை செய்து வந்தவர்களை காவல் துறை உதவியோடு வெளியேற்றி விட்டுதிடீரென பீகார் மாநில தொழிலாளர்கள் 10 பேரை கொண்டு வந்து வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் நீதிமன்றம் அந்த கடையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடாது என்று எந்தவித உத்தரவும் போடவில்லை. எனவே இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மேற்படி கடையில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த 10 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத்தர வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளி அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து பேரணியாக வந்தனர்.பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ரமேஷ், மூர்த்தி, செந்தில், சந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .பின்னர் தொழிலாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.