பிரபல ரவுடி கழுத்தில் வெட்டி கொலை:சந்தேகத்தின் அடிப்படையில் இருவரி கைடம் போலீசார் விசாரணை!

- Advertisement -

0

திருச்சி,திருவெறும்பூர் பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிற சுந்தர்ராஜ் (வயது 32).சரித்திர பதிவேடு குற்றவாளியான இவன் மீது திருவரம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.கழுத்தை வெட்டி கொலை செய்யும் எக்ஸ்பர்ட் ஆன இவன் கழுத்து வெட்டி காக்கா சுந்தர் என அடைமொழியுடன் வலம் வந்தான்.ரவுடி தனம் செய்து வந்த சுந்தர் ராஜ்அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளான்.

- Advertisement -


இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக்,திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.மோப்பநாய் லீலி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது . தடயவியல் நிபுணர் கலைவாணி சம்பவ இடத்தில் தடையங்களை சேகரித்தார்.கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன்கள் மதி,வடிவேல் ஆகியோருடன் சுந்தர்ராஜ் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த நிலையில் அவர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றியதில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்தில் எஸ்.பி. வருண் குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த
போது மற்றொரு பகுதியில் சுந்தர்ராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேனை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர் .இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் போலீஸ் பிரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.