திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலை நாடுநர்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 06.09.2024 மற்றும் 07.09.2024 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு (B.A., B.SC., B.COM., B.B.A.,) கல்வித் தகுதிகளையுடைய 19 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஓராண்டு முன் அனுபவம் உள்ள பெண் வேலை நாடுநர்கள் தங்களின் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.