திருச்சியில் பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்காளர் பட்டியலை வழங்கி மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆலோசனை…!
திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஜங்ஷன் கோட்டம், 54வது வார்டு, 176வது பூத் கமிட்டி கூட்டம் வார்டு தலைவர் மதுரை பாண்டியன் தலைமையில் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான எல் ரெக்ஸ் கலந்துகொண்டு பூத் நிர்வாகி களுக்கு புதிய வாக்காளர் பட்டியலை வழங்கி, ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, நகர்க்கோவில் அனீஸ் , துணை தலைவர் வல்லபாய் படேல், ஐடி பிரிவு மேற்கு ஒருங்கிணைப்பாளர் விஜய் குமார், கோட்ட நிர்வாகிகள் பெல்ட் சரவணன், ரமேஷ், குருசாமி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் துரைசிங், ஆசிரியர் குகன் ராஜ், அமுதம் நடராஜன், அண்ணாதுரை, பால மணி கண்டன், மேனகா, மீனம்பாள், ரெங்கசாமி, ஷண்முகம், சந்திரசேகர், ராஜா, லீலாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.