திருச்சி கிராப்பட்டியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் நண்பரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தந்தையுமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு, கழக முதன்மைச் செயலாளரும், நகரப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அருகில் அன்பில் பெரியசாமி,மதிவாணன், கிராப்பட்டி செல்வம் மற்றும் பலர் உள்ளனர்.திருச்சி மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு மைய சகோதரிகளுக்கு சேகர் அருண் சார்பில் நலத்திட்ட உதவிகளும், காலை உணவும் தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.