“தமிழ்நாடு பள்ளிகளில் AI வகுப்புகள்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

- Advertisement -

0

சென்னை எழும்பூரில்  இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ நடத்தும் பள்ளிகல்வி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “செயற்கை நுண்ணறிவு (AI) வருங் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பெரும் பங்காற்றப் போகிறது, அதன் காரணமாக தான் பள்ளிகளில் AI வகுப்புகள் நடத்த நாட்டில் முதல் மாநிலமாக தமிழ்நாடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

- Advertisement -

18 ஆம் நூற்றாண்டு மற்றும் 19ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் உலகில் பலருக்கு கல்வி என்றால் என்னவென்று தெரிய ஆரம்பித்தது. 1950ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்தியாவில் கல்வி என்றால் என்னவென்று பொதுமக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.மனப்பாடம் செய்து தேர்வை எழுதுவது அறிவு கிடையாது, மெக்காலே என்ற ஒரு மனிதர் வராமல் இருந்து இருந்தால் எல்லா இடங்களிலும் வேத பாட சாலைகளும், சம்ஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்பட்டு இருக்கும். தற்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.இந்த கருத்தரங்கில் கலந்துரையாடும் கருத்துகளை அறிக்கையாக கொடுத்தால் அதில் எதை துறையால் நிறைவேற்ற முடியுமோ அவற்றை  நான் நிறைவேற்றுவேன் .பள்ளி முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலையை பெற்றோர்கள் மாற்றி கொள்ள வேண்டும் அதற்கான விழிப்புணர்வை துறை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.