திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மா மரங்களை வெட்டி விற்பனை செய்த முனியப்பன் மற்றும் முருகேசனை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் முனியப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மா மரத்தை மட்டுமல்லாமல் ஆம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியையும் தேக்கமலை என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து தேக்கமலையையும் திருச்சி மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர்.