தமிழக பாஜக தலைமைக்கு 6 பேர் கொண்ட நிர்வாகிகள் :பாஜக தலைமை அறிவிப்பு!

- Advertisement -

0

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை 3 மாத காலம் மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளளார். அவர் அரசியலில் இருந்து இடைவெளி விட்டு   இருப்பதால் , தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க பாஜக தலைமை 6 பேர் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளது.அந்த கமிட்டியின் தலைவராக H.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு மேற்குறிப்பிட்ட கமிட்டி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கள் கட்சி பணிகளை மண்டல வாரியாக பிரித்து செயலாற்றுவார்கள் என்றும், ஒவ்வொரு நபருகும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படும் என்றும் யார் யாருக்கு எந்த மண்டலம் என குழு தலைவர் H.ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமை செயலதிகாரி அருண் சிங் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.