மக்களிடம் நிதியை திரட்டி கட்சி நடத்துகிறேன் : நாத கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்!

- Advertisement -

0

2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி, அதற்கான களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. கட்சி உள்கட்டமைப்பை சீரமைத்து, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யவும், மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் மாவட்ட வாரியாக கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதற்காக திருச்சியில் நடந்த பேட்டியில் வருண்குமாரின் ஸ்டேட்மெண்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர், என்னிடம் காசு இல்லை. மக்களிடம் கையேந்தி தான் கட்சியை நடத்துகிறேன். பிச்சை எடுத்து, திரள் நிதி திரட்டி கட்சி நடத்துகிறேன்.எனது காசிலிருந்தும் தான் சம்பளம் பெறுகிறாய். ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை பார்க்கட்டும்.  கன்னியாகுமரியில் பேசிய துரைமுருகனை திருவள்ளூரில் கைது செய்தததற்கான காரணம் என்ன?சாட்டை துரைமுருகனை கைது செய்த பின்னர் அவரது செல்போன் உரையாடலை வெளியே கசியவிட்டதற்கான காரணம் என்ன? யாருக்கு வேலை செய்கிறீர்கள். ஆடியோ வெளியிடுவதற்கு ஐடி விங்கில் வேலை செய்ய வேண்டியது தானே.  ஆடியோவை எடுத்து வெட்டி ஒட்டி வெளியிடுவதால் எத்தனை பேரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வருண்குமார் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாம்.நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக எழுத மாட்டார்கள். விருதுநகரில் எழுதியவனை திருச்சிக்கு தூக்கி வந்து கண்ணை கட்டி அடித்தது ஏன்?செல்போனை ஆய்வு செய்ய வேண்டிய வேலை போலீசாருடையது அல்ல. கட்சிக்காரர்களுடன் ஆயிரம் பேசுவோம்,அதை எப்படி பொதுவெளியில் வெளியிடுவீர்கள்? நாங்கள் செல்போனில் பேசுவது எப்படி பொதுவெளியில் கசிகிறது?  என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.