டிவி சீரியல்களை தணிக்கை செய்து வெளியிடக் கோரிய வழக்கு! உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!
தொலைக்காட்சி நாடகங்களில் (சீரியல்களில்) ஆபாச காட்சிகள் அதிமாக வருவதால், அவற்றை தணிக்கை செய்து வெளியிடும்படி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், “தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன.