திருச்சி சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை!

- Advertisement -

0

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகு–தியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சரசரியாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.பண்டிகை காலங்களில் ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும். இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார் கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் வருவார்கள்.

- Advertisement -

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் நேற்று காலை 4.30 மணியிலிருந்தே பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர். ஒரு ஆடு சுமார் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரம் வரை விலை போனது. வழக்கமாக வியாபாரிகள் கொண்டு வரும் ஆடுகளின் எண்ணிக்கையை விட நேற்று அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.