திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் & தங்கம் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!

- Advertisement -

0

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதேபோல் திருச்சியில் இருந்து வெளிநாடு களுக்கு வெளிநாட்டு பணம் கடத்தி செல்லப்படுகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் இருந்து  மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பேட்டிக் ஏர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர். அப்போது, அவர் ரூ.58 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், தங்க நகைகளை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.