திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலைகளில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தலைவர் ஜெயபாலன்,எச்ஏபிபி தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் விஜயன் தலைமையிலும் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு காந்தி உருவ பேனருக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மத்திய அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதோடு,புதிதாக அறிவித்துள்ள யுபிஎஸ் திட்டத்தையும் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் எந்த சங்கமாக இருந்தாலும் அதனுடன் இணைந்து போராடுவது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின்னர் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை முன்பு மத்திய அரசை கண்டித்து கோசமிட்டனர்.இதில் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.