இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும்,ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். இவர் தனது 86 ஆவது பிறந்தநாளை கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.