தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக நவாஸ்கனி எம்.பி போட்டியின்றி தேர்வு!

- Advertisement -

0

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம் தேதியன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு எம்.பி நவாஸ்கனி, வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் மேற்கண்ட பிரிவில் ஒரு காலியிடத்துக்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்திருந்தது.

 

 

Leave A Reply

Your email address will not be published.