திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் !

- Advertisement -

0

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் இன்று (20.09.2024) (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, Birds ரோடு. பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி,முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு, மேட்டுத்தெரு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை,கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (20.09.2024) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

- Advertisement -

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம் தென்னூர், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.