கழகம் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள்,பகுதி செயலாளர்கள்,வட்ட செயலாளர்கள், பகுதி,வட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள்,மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.