பலாரஸ் நாட்டில் வசித்து வரும் 36 வயதான பாடி பில்டர் இலியா தினமும் இரண்டு கிலோ இறைச்சி உட்பட 16500 கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டு உடலை பிட்டாக வைத்திருந்தார். தனது அசுரத்தனமான உடல் வாகைக்காக பரவலாக அறியப்பட்ட இவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக கோமாவில் இருந்து வந்த இலியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இலியாவின் மனைவி, தனது கணவர் மீது ஏற்பட்ட அதிர்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது கணவருக்கு முதலுதவி செய்த போதும், அவரது மூளை செயல் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
இலியாவின் மரணம் அதிகப்படியான புரதம் மற்றும் கலோரிகளை உட்கொள்வதன் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.