திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…!

- Advertisement -

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில்  போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், கிளைச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்று பேசினார். கோரிக்கைகள் குறித்து போயர் சமுதாயப் போராளி தேக்கமலை விளக்க உரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டார்.

- Advertisement -

போயர் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக நல வாரியம் அமைக்க முதலமைச்சரிடம் சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று  சந்தித்து  கோரிக்கை மனு வழங்க வழிவகை செய்கிறேன். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்களைப் போன்ற சமுதாய மக்களுக்கு நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர திமுக செயலாளரும் மேயர் அன்பழகன் மாவட்டத் துணைத் தலைவர் ராஜ், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட துணை தலைவர் சின்னச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.