ஒப்பந்த பேச்சு வார்த்தை கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம்!

- Advertisement -

0

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஒப்பந்த பேச்சு வார்த்தை கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.இந்த வாயிற் கூட்டத்தில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகை வழங்கி தொழிலாளர் பிரச்சனையை தீர்வு காண வேண்டும் ,ஓய்வு பெற்ற அன்றே பண பலன்கள் வழங்கப்பட வேண்டும், அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம், ஊதியம் முரண்பாடுகளை கலைந்து மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பேட்டா, இன்சென்டிவ், மருத்துவ காப்பீடு, வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்புவது, காண்டாக்ட் முறை ரத்து உள்ளிட்ட கூட்டமைப்பு வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தை கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.