திருப்பூரில் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை:போலீசார் விசாரணை…!

- Advertisement -

0

திருப்பூர் அருகே பொங்கலூர் – சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இது குறித்து அப்பகுதி மக்களுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகை, பணத்துக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் வீடு அமைந்து உள்ளதால் சி.சி.டி.வி., கேமரா ஏதும் இல்லை. இதனால் அருகில் வசிக்கும் விவசாயிகள், கிராம மக்களிடம் அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.